Saturday, November 20, 2010

முள் தைத்த செருப்பு

திரும்பிப் பார்கிறேன், எங்கு விட்டு சென்றேனென்று..

கவிதையோ கதையோ பாதித்துவிட முடியாத ஒரு மரத்த மனநிலையில் விட்டொழிந்திருக்கலாம் வலை பதிதலை.

ஒரு நாளுக்கு இத்தனை வினாடிகள் ஏன்? ஒன்றை நகர்த்துவதற்குள் மற்றொன்று, மாய்த்து விடுகிறது முடிவே இல்லாது!! மூளை வேறு சதா ஓயாது பிதற்றிக் கொண்டு. எதில் தான் கவனம் கொள்ளுமோ?

வாழ்க்கை என்ற ஒன்றை வரையறுத்தவர்கள், அர்த்தம், பயண் இதையெல்லாம் ஏன் படைத்தனர்? கட்டுகோப்புகள் சமுதாயத்திலிருந்து எதை சாதித்து விட்டோம்?! இன்றளவும் குறைகளுடனே வாழ்கிறோம். முதல் மனிதனின் ஒரு குறையாவது நிவர்த்தி செய்யப்பட்டதா? மேலும் மேலும் குழம்பித்தான் போயிருக்கிறோம்.

ஒரு மாற்றத்தை கூட இயல்பாக எடுத்துகொள்ள முடிவதில்லை. இழப்பு என்ற ஒன்றை யார் கண்டுபிடித்தானோ? எல்லை வரையறுக்க பட்டு, எதிபார்ப்பு, நம்பிக்கை கூடிக்கொண்டு... இதுவா வாழ்க்கை?!! கால் போன போக்கில் போக வேண்டாமா? இதற்கும் எதிர்மறை - மிருகமா நீ என்று!! மனிதனாக இருந்து மட்டும் என்ன சாதித்து விட்டோம்.

சுய உணர்வு அவசியம், mastry of self முயற்சிக்கலாம் எவரும்... சித்தர்களின் வாழ்க்கை முறை நல்லது.. பின்பற்ற சிபாரிசு செய்கிறேன் மற்றபடி எதுவும் சொல்வதற்கில்லை.. முள் தைத்த செருப்பாய் நகரும்..