Sunday, December 13, 2009
Saturday, November 28, 2009
தவறு எனப்படுவது
ஒரு மனதின் வலி, அதன் உண்மையான உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப்படாத போது எப்படிப்பட்ட உறவும் நொடித்து தான் போகிறது... தவருக்குலான மனம் அதன் வாட்டம், தவறினால் புண்பட்ட மனம் அதன் சுணக்கம் இதில் எதன் வலியும் குறையாது ஒன்றியிருப்பின் வெளியை, அன்பை குழைத்து மறத்தல் எனும் முடிவையே முன்வைக்கிறது.
புரிதலுக்கு உள்ளாகும் எதுவும் இயல்பாகவே எடுத்துக்கொள்ளப்படும் போது, புரிதலுக்கு உட்படாத சிலவும் இயல்பாகதானே எடுதுக்கொள்ளபடவேண்டும்...
புரிந்துணர்வின் இருபக்கங்கள் மறக்கப்பட்டு - ஒருதலைபட்சமாகவே உணர்வு வெற்றிகொள்ளும் போதோ, அப்படி வெற்றிகொள்ளும் மெல்லிய இதயத்தின் உணர்வின் நியாயங்களில் உறவு தோற்கும் போதோ இழப்பு வலி மட்டுமின்றி ஏக்கத்தின் வேதனையை, குற்றவாளியின் நாழிகைகளை கொடுத்து செல்கிறது இன்னொரு மனதுக்கு... கொடுமையான ஒன்றாய் வாழ்வை அழிக்கும் ஒன்றாய் அது அமைகிறது.
நம்பிக்கைகளுள் தளைத்த உறவு கூட இப்படி பட்ட சந்தர்பங்களில் வெளிரி தளர்ந்து போவது தான் வேடிக்கை.. சந்தர்பங்களை தாண்டி நிற்கும் நம்பிக்கைக்குரிய உறவுகள் வெல்லும்.. வெல்ல வாழ்த்துக்கள்
Thursday, June 4, 2009
கரு - ப்ப் - பிருட் - டூ
தன் சுமை பொறுக்காத நகர்வு
வளையங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டு
கம்பிகள் இறுக்கும் வலை
முடியாத சுழற்சி
உறங்கும் விழிகளுக்குள் புகும் துர்கனவு
அசைவற்ற தேகத்தை ஆட்கொள்ளும் மரணம்
சுற்று வழி பிரயாணம்
பிரயாணம் வரை வாழ்வு
மரணம் கேட்கும் ஓய்வு
பொய் கூறியவன் உடல் அழுகும்
பூ வாடை யாருக்கு?
ஓய்வு கொள்
மூர்சையாகாதே
மரணம் காத்திரு;
ஓயவேது ராசா
Monday, April 27, 2009

இப்போது கூட யோசிக்கவில்லை, நம்பியின் வாடை குமட்டிஎடுக்கிறது.....
காதலி கோபித்துக்கொள்கிறாள், நண்பர்கள் சிரிக்கிறார்கள், கவிதையோ கதையோ வருவதற்கில்லை...
தூக்கம் வருகிறது, காமத்திற்கு குறைவில்லை யோசித்தா வருகிறது இதெல்லாம்...
வாழ்கை சென்றுகொண்டுதான் இருக்கிறது, யோசிக்க கூடிய மாதிரி அமைவதில்லை எதுவும். புத்தகம் எடுத்தால் புரண்டு படுக்கிறது மனசு, கவிதையை இனிமேலும் கொலை செய்ய வேண்டாமென்று மூடி விடுகிறேன். யோசித்திருந்தால் நடந்திருக்காதுதான் பலவும்... நடந்திராவிட்டால் சுவாரஸ்யமேது.... குருடனுக்குதானே கற்பனைகள் அதிகம்... நடக்கும் பட்சத்தில் எல்லாம் நிகழ்வே... நல்லதெது? தெரிந்தால் ஞானி தான்...
புரண்டு படுக்க தோனுகையில், படுக்கை வெளி தாண்டி வீழ்கையில் தான் கனவு கலைகிறது... தோன்றி கனவு களைவதில் துக்கமாகத்தான் உள்ளது. நாயின் கனவை பற்றிதான் யோசித்து வருகிறேன்...
Friday, April 17, 2009
Saturday, March 21, 2009
கலைஞன் - குமிழ்
கலைஞன் அந்நியப்படுதல் முலமே கலையை சேர்கிறான். கலைஞனின் ஒதுங்கியிருப்பே கலையை மீட்டெடுக்கிறது. சமுதாயத்திற்காக, மக்களுக்காக படைக்கப்படும் கலைகள் என்றுமே காலவோட்டத்தை கடந்து செல்லும் திராநியற்றதாகவே உள்ளது. ஓர் ஜுவாலை, உயிர் அழுத்தம் கூடிய கலைஞன் தன்னை அழித்து - ஒதுக்கி படைக்கும் கலை காலமற்று ஜீவிக்கிறது (immortalized).
அந்நியபடுதலின் இன்பத்தை கலைஞன் நுகரும்போதே அவன் உருபெறுகிறான் அந்நியபடுதலின் எல்லையையும் அவனே நிர்ணயிக்கிறான்.
நிரந்தரமற்ற அந்த அந்நியபடுதலின் இன்பம் கலைஞனின் சந்தோசத்தில் ஓர் துளியை மட்டுமே நிரப்புகிறது. கலைஞனின் மனம் அதுளிகளை கொண்டு சமுத்திரம் காணவே தவமிருக்கிறது.
எந்த கலைஞனும் இம்முயற்சியை கைவிடுவதும் இல்லை வெற்றி காண்பதும் இல்லை, பிறகும் இந்த மாத்தவம் தொடரவே செய்கிறது.
Monday, March 2, 2009
ஒரு இலை உதிர்ந்தது
Sunday, February 22, 2009
கிருஷ்ணப் பருந்து - ஓர் தரிசனம்
நாவலில் வாழ்ந்துவிட்டு போகும் கதாபாத்திரம் உண்டு பண்ணும் தாக்கம் வாசகனின் நெஞ்ஜோட்டத்தில் அமைந்து விட்டால் அது தான் அதன் வெற்றி. ஒரு பக்கத்தில் ஒரு முறயோ அல்லது வரிகளின் தோறும் இணைத்து பர்ர்க்க முடிகிற வகையில் எதார்த்தமான மனிதர்களும், எதார்த்தமில்லாத நினைவுகளுமாய் களம் காண்கிறது. எளிதாக சொல்லியிருந்தால் இதன் கணம் குறைந்து தான் போயிருக்கும். குருசாமி சரியும் நேரம் மனிதம் அதன் இயல்பில் நிமிர்ந்து சிரிக்கிறது. முகமூடிகளின் ஒப்பனையாய் தாடியும், அந்த தாடிக்குள் மறையும் காம ரகஸ்யங்களும் மென்மையாய் மனதின் இருண்ட ஸ்வாரஸ்யங்களுக்கு இட்டு செல்கிறது. முழுமையான உளவியல் ரீதியில் சம்பவங்களை நியாயப்படுத்தி இருப்பது வாசகர்களின் ஈகோ' வை சமாதானப்படுத்தவே என்று தோன்றுகிறது. வயது முதிர்ந்த காமம் வலிய தன்னுணர்வால் வெல்லப்படுகிறது. கிருஷ்ணப் பருந்தின் தவம் நிகர்சனமாகும் தருணம் அது. 'ஸாமியப்போ' இறங்கிய பொழுதும் நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.
Wednesday, February 18, 2009
தீட்சை
குருதியற்ற உடலை கிழிக்க
பிதுங்கிக் கொண்டிருக்கிறது பிசின்
ஆசிர்வதிக்கப் பட்ட நீரால் கழுவப்படட்டும் என்கிறான்
நீரை உட்கொண்டு கசிகிறது இரத்தம்
பீதியுற்றவனாய் வெட்டி எறிகிறான்
பிறகும்
தீட்சைப் பெற்று
ஒவ்வொரு துண்டமும் முளைத்தெழுகிறது
Sunday, February 8, 2009
Friday, February 6, 2009
Blogging Quick Tips
நிழல்
எட்சனமும் நிறைந்திருக்கிறது உன் நெருக்கம்
உயிரில் கலந்தே போனது உன் ஸ்பரிசம்
நெடு விரல் வருட
கற்றை குழலில் ஒன்றிரண்டாவது
சிக்குகள் கிட்டாத போது மட்டும்
ஊடல் கொள்வோம்
விரல்கல் உண்டு
மடி சாய்வாய்
என் மகளே
Thursday, February 5, 2009
ரில்கே ஒரு அறிமுகம்
நெஞ்சத்தின் கனலலிலே துவளும் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தவன்.
காப்கா அறிந்த/ரசித்த 'வர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கவிஞன், எனக்கு ரில்கேவின் அறிமுகம் எதேர்ச்சையாக நிகழ்ந்தது, அதிக சிரமம் இன்றி கண்டுகொண்டது அத்ரிஷ்டம் தான் மொழி பெயர்ப்புக்கு கடினமான கவிதைகள் - நம்மவர்கள் புத்தகம் போட்டுவிட்டனர், சென்னை கண்காட்சியில் பார்க்க முடிந்தது, வியப்பாக இருந்த்து. அடுத்த வருடம் பதிப்பகத்திற்கு ஒன்றாக புத்தகம் வெளிவந்தாலும் வியப்பதற்கில்லை.
என்னால் மறக்க முடியாத ரில்கேயின் ஒரு கவிதை -பலங் ஜாய்
http://www.poemhunter.com/poem/blank-joy/ என்ற தளத்தில் அவரது கவிதைகளின் தொகுப்பு காணலாம்...


