Saturday, November 28, 2009

தவறு எனப்படுவது

தொலைப்பு, மறத்தல் கடினமாகும் போதுதான் செய்த தவறின் சாரிரம், அதன் கடினம், மன்னிக்க முடியாத தனம் புரிதளுக்குல்லாகிறது. எப்போதுமே இருமனம் சம்மந்த பட்ட எதுவும் சரி/தவறு இவற்றுள் எல்லைபடுத்தாமல் இருக்கும் வரை இலகுவாகவே கடந்து விடுகிறது.
ஒரு மனதின் வலி, அதன் உண்மையான உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப்படாத போது எப்படிப்பட்ட உறவும் நொடித்து தான் போகிறது... தவருக்குலான மனம் அதன் வாட்டம், தவறினால் புண்பட்ட மனம் அதன் சுணக்கம் இதில் எதன் வலியும் குறையாது ஒன்றியிருப்பின் வெளியை, அன்பை குழைத்து மறத்தல் எனும் முடிவையே முன்வைக்கிறது.
புரிதலுக்கு உள்ளாகும் எதுவும் இயல்பாகவே எடுத்துக்கொள்ளப்படும் போது, புரிதலுக்கு உட்படாத சிலவும் இயல்பாகதானே எடுதுக்கொள்ளபடவேண்டும்...
புரிந்துணர்வின் இருபக்கங்கள் மறக்கப்பட்டு - ஒருதலைபட்சமாகவே உணர்வு வெற்றிகொள்ளும் போதோ, அப்படி வெற்றிகொள்ளும் மெல்லிய இதயத்தின் உணர்வின் நியாயங்களில் உறவு தோற்கும் போதோ இழப்பு வலி மட்டுமின்றி ஏக்கத்தின் வேதனையை, குற்றவாளியின் நாழிகைகளை கொடுத்து செல்கிறது இன்னொரு மனதுக்கு... கொடுமையான ஒன்றாய் வாழ்வை அழிக்கும் ஒன்றாய் அது அமைகிறது.
நம்பிக்கைகளுள் தளைத்த உறவு கூட இப்படி பட்ட சந்தர்பங்களில் வெளிரி தளர்ந்து போவது தான் வேடிக்கை.. சந்தர்பங்களை தாண்டி நிற்கும் நம்பிக்கைக்குரிய உறவுகள் வெல்லும்.. வெல்ல வாழ்த்துக்கள்

Thursday, June 4, 2009

கரு - ப்ப் - பிருட் - டூ

கதியற்ற வாழ்வு

தன் சுமை பொறுக்காத நகர்வு

வளையங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டு

கம்பிகள் இறுக்கும் வலை

முடியாத சுழற்சி

உறங்கும் விழிகளுக்குள் புகும் துர்கனவு

அசைவற்ற தேகத்தை ஆட்கொள்ளும் மரணம்

சுற்று வழி பிரயாணம்

பிரயாணம் வரை வாழ்வு

மரணம் கேட்கும் ஓய்வு

பொய் கூறியவன் உடல் அழுகும்

பூ வாடை யாருக்கு?

ஓய்வு கொள்

மூர்சையாகாதே

மரணம் காத்திரு;

ஓயவேது ராசா

Monday, April 27, 2009


எதையும் செய்வதற்கு முன் யோசிப்பதில்லை. யோசிக்க நேரமேது... யோசித்து நடந்திருந்தால் யோசிக்க தோணலாம், பிறகு என்ன யோசனை வேண்டியிருக்கு? முன்கூட்டியே அனுமாநித்திடதான் வேண்டியுள்ளது, யோசனைகள் தேவையில்லை என்பதையும் யோசனைப்படி நடந்துகொள்ள ஒத்துவராத மனநிலையையும்.

இப்போது கூட யோசிக்கவில்லை, நம்பியின் வாடை குமட்டிஎடுக்கிறது.....


காதலி கோபித்துக்கொள்கிறாள், நண்பர்கள் சிரிக்கிறார்கள், கவிதையோ கதையோ வருவதற்கில்லை...


தூக்கம் வருகிறது, காமத்திற்கு குறைவில்லை யோசித்தா வருகிறது இதெல்லாம்...


வாழ்கை சென்றுகொண்டுதான் இருக்கிறது, யோசிக்க கூடிய மாதிரி அமைவதில்லை எதுவும். புத்தகம் எடுத்தால் புரண்டு படுக்கிறது மனசு, கவிதையை இனிமேலும் கொலை செய்ய வேண்டாமென்று மூடி விடுகிறேன். யோசித்திருந்தால் நடந்திருக்காதுதான் பலவும்... நடந்திராவிட்டால் சுவாரஸ்யமேது.... குருடனுக்குதானே கற்பனைகள் அதிகம்... நடக்கும் பட்சத்தில் எல்லாம் நிகழ்வே... நல்லதெது? தெரிந்தால் ஞானி தான்...


புரண்டு படுக்க தோனுகையில், படுக்கை வெளி தாண்டி வீழ்கையில் தான் கனவு கலைகிறது... தோன்றி கனவு களைவதில் துக்கமாகத்தான் உள்ளது. நாயின் கனவை பற்றிதான் யோசித்து வருகிறேன்...



Friday, April 17, 2009

ஒளிந்திருந்து பார்க்கையில்
என்னுடனான ஊடலுக்கு ஒத்திகையில் ஈடுபட்டிருந்தாய்

பின்னிருந்து உன் இடை அணைத்த போது
நாணம் பூத்து மார்போடு ஒட்டிகொண்டாய்

அன்றைய இரவு அப்சரஸ் ஒன்று
தயங்கி நம் அறையில் நுழைந்தது

உன் இதழ்களை புண்ணாக்கியது
நான் இல்லை என்பதை நீ நம்பவேஇல்லை

Saturday, March 21, 2009

கலைஞன் - குமிழ்

கலைஞனுக்கான பூர்த்தி - சர்வமும் தனக்குள் கொண்டுள்ளதா?
கலைஞன் அந்நியப்படுதல் முலமே கலையை சேர்கிறான். கலைஞனின் ஒதுங்கியிருப்பே கலையை மீட்டெடுக்கிறது. சமுதாயத்திற்காக, மக்களுக்காக படைக்கப்படும் கலைகள் என்றுமே காலவோட்டத்தை கடந்து செல்லும் திராநியற்றதாகவே உள்ளது. ஓர் ஜுவாலை, உயிர் அழுத்தம் கூடிய கலைஞன் தன்னை அழித்து - ஒதுக்கி படைக்கும் கலை காலமற்று ஜீவிக்கிறது (immortalized).
அந்நியபடுதலின் இன்பத்தை கலைஞன் நுகரும்போதே அவன் உருபெறுகிறான் அந்நியபடுதலின் எல்லையையும் அவனே நிர்ணயிக்கிறான்.
நிரந்தரமற்ற அந்த அந்நியபடுதலின் இன்பம் கலைஞனின் சந்தோசத்தில் ஓர் துளியை மட்டுமே நிரப்புகிறது. கலைஞனின் மனம் அதுளிகளை கொண்டு சமுத்திரம் காணவே தவமிருக்கிறது.
எந்த கலைஞனும் இம்முயற்சியை கைவிடுவதும் இல்லை வெற்றி காண்பதும் இல்லை, பிறகும் இந்த மாத்தவம் தொடரவே செய்கிறது.

Monday, March 2, 2009

ஒரு இலை உதிர்ந்தது

துக்கமான நாட்கள் வலிய வந்து என் நாட்காட்டியை நிரப்புகிறது. என் பாத்திரம் உணர்ந்து கொள்ள முடியாத அளவில் காட்சிகள் நகர்ந்துகொண்டிருகின்றன, நிதர்சனமாய் உணர்வுகளுக்கு ஆட்படாத வார்த்தைகளால் வசனங்கள் கோர்த்து பரிச்சயமற்ற நடிகனாய் என் வெளியில் நான் காட்சிபடுகிறேன். என்னை அறிந்தவர்களுக்கு கூறிக்கொள்ள மட்டும் வார்த்தைகள் வெளிப்படுகின்றன மிக்க பிரயத்தனமின்றி. மனது அதன் போக்கில் நடை போடுகிறது, வால் நட்சத்திரங்கள் பாதையில் கண்டங்கள் அழிந்துபோவது போல், மனவெளியில் அதீத விசையுடனே துன்பமும் பிரயாணப்படுகிறது.

Sunday, February 22, 2009

கிருஷ்ணப் பருந்து - ஓர் தரிசனம்

ஆ. மாதவனின் கிருஷ்ணப் பருந்து படித்து முடித்தேன்.
நாவலில் வாழ்ந்துவிட்டு போகும் கதாபாத்திரம் உண்டு பண்ணும் தாக்கம் வாசகனின் நெஞ்ஜோட்டத்தில் அமைந்து விட்டால் அது தான் அதன் வெற்றி. ஒரு பக்கத்தில் ஒரு முறயோ அல்லது வரிகளின் தோறும் இணைத்து பர்ர்க்க முடிகிற வகையில் எதார்த்தமான மனிதர்களும், எதார்த்தமில்லாத நினைவுகளுமாய் களம் காண்கிறது. எளிதாக சொல்லியிருந்தால் இதன் கணம் குறைந்து தான் போயிருக்கும். குருசாமி சரியும் நேரம் மனிதம் அதன் இயல்பில் நிமிர்ந்து சிரிக்கிறது. முகமூடிகளின் ஒப்பனையாய் தாடியும், அந்த தாடிக்குள் மறையும் காம ரகஸ்யங்களும் மென்மையாய் மனதின் இருண்ட ஸ்வாரஸ்யங்களுக்கு இட்டு செல்கிறது. முழுமையான உளவியல் ரீதியில் சம்பவங்களை நியாயப்படுத்தி இருப்பது வாசகர்களின் ஈகோ' வை சமாதானப்படுத்தவே என்று தோன்றுகிறது. வயது முதிர்ந்த காமம் வலிய தன்னுணர்வால் வெல்லப்படுகிறது. கிருஷ்ணப் பருந்தின் தவம் நிகர்சனமாகும் தருணம் அது. 'ஸாமியப்போ' இறங்கிய பொழுதும் நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.

Wednesday, February 18, 2009

தீட்சை

இரட்சகனின் வாள் மின்னுகிறது

குருதியற்ற உடலை கிழிக்க
பிதுங்கிக் கொண்டிருக்கிறது பிசின்

ஆசிர்வதிக்கப் பட்ட நீரால் கழுவப்படட்டும் என்கிறான்

நீரை உட்கொண்டு கசிகிறது இரத்தம்

பீதியுற்றவனாய் வெட்டி எறிகிறான்

பிறகும்

தீட்சைப் பெற்று

ஒவ்வொரு துண்டமும் முளைத்தெழுகிறது

Sunday, February 8, 2009


கடைசி வர்ண குழைவில்
சிக்கியது உனது இதழின் ஒளி
நிறைய எறும்புகள் மொய்தவுடன் தான்
தெரிந்து கொண்டேன்
என் ரத்தத்தில் கனிந்திருந்த
உன் ருசியை

Friday, February 6, 2009

Blogging Quick Tips

watch for the you tube... unique way of presentation (I believe)

நிழல்

எதை விடவும் இனிதாகிறது உன் அன்பு

எட்சனமும் நிறைந்திருக்கிறது உன் நெருக்கம்

உயிரில் கலந்தே போனது உன் ஸ்பரிசம்

நெடு விரல் வருட
கற்றை குழலில் ஒன்றிரண்டாவது
சிக்குகள் கிட்டாத போது மட்டும்
ஊடல் கொள்வோம்

விரல்கல் உண்டு

மடி சாய்வாய்

என் மகளே

Thursday, February 5, 2009

ரில்கே ஒரு அறிமுகம்

ரில்கே (ரைனேர் மரியா ரில்கே)
நெஞ்சத்தின் கனலலிலே துவளும் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தவன்.
காப்கா அறிந்த/ரசித்த 'வர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கவிஞன், எனக்கு ரில்கேவின் அறிமுகம் எதேர்ச்சையாக நிகழ்ந்தது, அதிக சிரமம் இன்றி கண்டுகொண்டது அத்ரிஷ்டம் தான் மொழி பெயர்ப்புக்கு கடினமான கவிதைகள் - நம்மவர்கள் புத்தகம் போட்டுவிட்டனர், சென்னை கண்காட்சியில் பார்க்க முடிந்தது, வியப்பாக இருந்த்து. அடுத்த வருடம் பதிப்பகத்திற்கு ஒன்றாக புத்தகம் வெளிவந்தாலும் வியப்பதற்கில்லை.

என்னால் மறக்க முடியாத ரில்கேயின் ஒரு கவிதை -பலங் ஜாய்

http://www.poemhunter.com/poem/blank-joy/ என்ற தளத்தில் அவரது கவிதைகளின் தொகுப்பு காணலாம்...

Saturday, January 31, 2009

என் காதலிக்காக



தூரிகைகள் நீக்கிவிடு

வர்ணங்கள் ஒழித்துவிடு

எழிலோடு வந்தருந்து
வெற்றுக் கோப்பைக்குள்

றும் உன் நிறம்