ஆ. மாதவனின் கிருஷ்ணப் பருந்து படித்து முடித்தேன்.
நாவலில் வாழ்ந்துவிட்டு போகும் கதாபாத்திரம் உண்டு பண்ணும் தாக்கம் வாசகனின் நெஞ்ஜோட்டத்தில் அமைந்து விட்டால் அது தான் அதன் வெற்றி. ஒரு பக்கத்தில் ஒரு முறயோ அல்லது வரிகளின் தோறும் இணைத்து பர்ர்க்க முடிகிற வகையில் எதார்த்தமான மனிதர்களும், எதார்த்தமில்லாத நினைவுகளுமாய் களம் காண்கிறது. எளிதாக சொல்லியிருந்தால் இதன் கணம் குறைந்து தான் போயிருக்கும். குருசாமி சரியும் நேரம் மனிதம் அதன் இயல்பில் நிமிர்ந்து சிரிக்கிறது. முகமூடிகளின் ஒப்பனையாய் தாடியும், அந்த தாடிக்குள் மறையும் காம ரகஸ்யங்களும் மென்மையாய் மனதின் இருண்ட ஸ்வாரஸ்யங்களுக்கு இட்டு செல்கிறது. முழுமையான உளவியல் ரீதியில் சம்பவங்களை நியாயப்படுத்தி இருப்பது வாசகர்களின் ஈகோ' வை சமாதானப்படுத்தவே என்று தோன்றுகிறது. வயது முதிர்ந்த காமம் வலிய தன்னுணர்வால் வெல்லப்படுகிறது. கிருஷ்ணப் பருந்தின் தவம் நிகர்சனமாகும் தருணம் அது. 'ஸாமியப்போ' இறங்கிய பொழுதும் நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.
Sunday, February 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment