Monday, March 2, 2009

ஒரு இலை உதிர்ந்தது

துக்கமான நாட்கள் வலிய வந்து என் நாட்காட்டியை நிரப்புகிறது. என் பாத்திரம் உணர்ந்து கொள்ள முடியாத அளவில் காட்சிகள் நகர்ந்துகொண்டிருகின்றன, நிதர்சனமாய் உணர்வுகளுக்கு ஆட்படாத வார்த்தைகளால் வசனங்கள் கோர்த்து பரிச்சயமற்ற நடிகனாய் என் வெளியில் நான் காட்சிபடுகிறேன். என்னை அறிந்தவர்களுக்கு கூறிக்கொள்ள மட்டும் வார்த்தைகள் வெளிப்படுகின்றன மிக்க பிரயத்தனமின்றி. மனது அதன் போக்கில் நடை போடுகிறது, வால் நட்சத்திரங்கள் பாதையில் கண்டங்கள் அழிந்துபோவது போல், மனவெளியில் அதீத விசையுடனே துன்பமும் பிரயாணப்படுகிறது.

No comments:

Post a Comment