Wednesday, February 18, 2009

தீட்சை

இரட்சகனின் வாள் மின்னுகிறது

குருதியற்ற உடலை கிழிக்க
பிதுங்கிக் கொண்டிருக்கிறது பிசின்

ஆசிர்வதிக்கப் பட்ட நீரால் கழுவப்படட்டும் என்கிறான்

நீரை உட்கொண்டு கசிகிறது இரத்தம்

பீதியுற்றவனாய் வெட்டி எறிகிறான்

பிறகும்

தீட்சைப் பெற்று

ஒவ்வொரு துண்டமும் முளைத்தெழுகிறது

No comments:

Post a Comment