
இப்போது கூட யோசிக்கவில்லை, நம்பியின் வாடை குமட்டிஎடுக்கிறது.....
காதலி கோபித்துக்கொள்கிறாள், நண்பர்கள் சிரிக்கிறார்கள், கவிதையோ கதையோ வருவதற்கில்லை...
தூக்கம் வருகிறது, காமத்திற்கு குறைவில்லை யோசித்தா வருகிறது இதெல்லாம்...
வாழ்கை சென்றுகொண்டுதான் இருக்கிறது, யோசிக்க கூடிய மாதிரி அமைவதில்லை எதுவும். புத்தகம் எடுத்தால் புரண்டு படுக்கிறது மனசு, கவிதையை இனிமேலும் கொலை செய்ய வேண்டாமென்று மூடி விடுகிறேன். யோசித்திருந்தால் நடந்திருக்காதுதான் பலவும்... நடந்திராவிட்டால் சுவாரஸ்யமேது.... குருடனுக்குதானே கற்பனைகள் அதிகம்... நடக்கும் பட்சத்தில் எல்லாம் நிகழ்வே... நல்லதெது? தெரிந்தால் ஞானி தான்...
புரண்டு படுக்க தோனுகையில், படுக்கை வெளி தாண்டி வீழ்கையில் தான் கனவு கலைகிறது... தோன்றி கனவு களைவதில் துக்கமாகத்தான் உள்ளது. நாயின் கனவை பற்றிதான் யோசித்து வருகிறேன்...

No comments:
Post a Comment