Thursday, June 4, 2009

கரு - ப்ப் - பிருட் - டூ

கதியற்ற வாழ்வு

தன் சுமை பொறுக்காத நகர்வு

வளையங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டு

கம்பிகள் இறுக்கும் வலை

முடியாத சுழற்சி

உறங்கும் விழிகளுக்குள் புகும் துர்கனவு

அசைவற்ற தேகத்தை ஆட்கொள்ளும் மரணம்

சுற்று வழி பிரயாணம்

பிரயாணம் வரை வாழ்வு

மரணம் கேட்கும் ஓய்வு

பொய் கூறியவன் உடல் அழுகும்

பூ வாடை யாருக்கு?

ஓய்வு கொள்

மூர்சையாகாதே

மரணம் காத்திரு;

ஓயவேது ராசா

No comments:

Post a Comment