Saturday, November 28, 2009

தவறு எனப்படுவது

தொலைப்பு, மறத்தல் கடினமாகும் போதுதான் செய்த தவறின் சாரிரம், அதன் கடினம், மன்னிக்க முடியாத தனம் புரிதளுக்குல்லாகிறது. எப்போதுமே இருமனம் சம்மந்த பட்ட எதுவும் சரி/தவறு இவற்றுள் எல்லைபடுத்தாமல் இருக்கும் வரை இலகுவாகவே கடந்து விடுகிறது.
ஒரு மனதின் வலி, அதன் உண்மையான உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப்படாத போது எப்படிப்பட்ட உறவும் நொடித்து தான் போகிறது... தவருக்குலான மனம் அதன் வாட்டம், தவறினால் புண்பட்ட மனம் அதன் சுணக்கம் இதில் எதன் வலியும் குறையாது ஒன்றியிருப்பின் வெளியை, அன்பை குழைத்து மறத்தல் எனும் முடிவையே முன்வைக்கிறது.
புரிதலுக்கு உள்ளாகும் எதுவும் இயல்பாகவே எடுத்துக்கொள்ளப்படும் போது, புரிதலுக்கு உட்படாத சிலவும் இயல்பாகதானே எடுதுக்கொள்ளபடவேண்டும்...
புரிந்துணர்வின் இருபக்கங்கள் மறக்கப்பட்டு - ஒருதலைபட்சமாகவே உணர்வு வெற்றிகொள்ளும் போதோ, அப்படி வெற்றிகொள்ளும் மெல்லிய இதயத்தின் உணர்வின் நியாயங்களில் உறவு தோற்கும் போதோ இழப்பு வலி மட்டுமின்றி ஏக்கத்தின் வேதனையை, குற்றவாளியின் நாழிகைகளை கொடுத்து செல்கிறது இன்னொரு மனதுக்கு... கொடுமையான ஒன்றாய் வாழ்வை அழிக்கும் ஒன்றாய் அது அமைகிறது.
நம்பிக்கைகளுள் தளைத்த உறவு கூட இப்படி பட்ட சந்தர்பங்களில் வெளிரி தளர்ந்து போவது தான் வேடிக்கை.. சந்தர்பங்களை தாண்டி நிற்கும் நம்பிக்கைக்குரிய உறவுகள் வெல்லும்.. வெல்ல வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment