Friday, April 17, 2009

ஒளிந்திருந்து பார்க்கையில்
என்னுடனான ஊடலுக்கு ஒத்திகையில் ஈடுபட்டிருந்தாய்

பின்னிருந்து உன் இடை அணைத்த போது
நாணம் பூத்து மார்போடு ஒட்டிகொண்டாய்

அன்றைய இரவு அப்சரஸ் ஒன்று
தயங்கி நம் அறையில் நுழைந்தது

உன் இதழ்களை புண்ணாக்கியது
நான் இல்லை என்பதை நீ நம்பவேஇல்லை

No comments:

Post a Comment